Monday, November 21, 2011

என் கன்னங்கள்!

என் கன்னங்கள்!

பாகம்பிரியாள்

மின்னஞ்சலில் வரும் காதல் தூது எல்லாம் எனக்கு
எழுத்துக்களின் மௌன ஊர்வலமாகவே தோன்றுகிறது.
கடிதங்களில் தென்படும் வரிகள் எல்லாம்
கரும் எழுத்துக்களின் நடனமாய் மாறி விடுகின்றன. .
குறுஞ்செய்தியாய் வருபவை  எல்லாம்
குறுகுறுப்புக்கு அவ்வப்போது  தீனி போடும்.
இவை எல்லாம் என் காதலைக் கட்டிக்காக்கும்
என்று எண்ணியே இறுமாந்திருந்தேன்!
ஆனால்
குழைவான உன் குரலைக் கேட்டவுடன்
குப்பெனச் சிவக்கும் என் கன்னங்கள்
காட்டிக் கொடுத்து விடுகின்றன.. என் காதலை!
படத்திற்கு நன்றி

No comments:

Post a Comment