Monday, November 21, 2011

எதிரும் புதிரும்?


எதிரும் புதிரும்?
  

பாகம்பிரியாள்

நீயும் நானும், எதிரும் புதிருமாய்
ஒரு கோப்பை தேநீர் மற்றும்
ஓராயிரம் நினைவுகளை
ஓசையின்றி அருந்திக் கொண்டிருக்கிறோம்.

கை பட்டு உடைந்த
கோப்பைத் துண்டுகளை நீயும்,
கண்பட்டு உடைந்த
நினைவுகளை நானும்,
மௌனமாய்ப்
பொறுக்கிக் கொண்டிருக்கையில்
மனசுக்குள் ஓடுகிறது ஒரு கேள்வி!

"
முதலில் முடிக்கப் போவது யார்?"


================================
ஓவியம்: ஏ.பி. ஸ்ரீதர்
Aug 07, 2009சென்னை  ஆன்லைனில் வெளியான கவிதை 

No comments:

Post a Comment