Monday, February 23, 2009

அன்று புரியவில்லை இன்று..?


கண் மூடியபின்பும் கண்ணீர் சிந்திய
கவிஞனின் மனநிலை அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது நீந்தத் தூண்டும் நெருப்பாறு என்று.

உணவிலாமல் உணர்வுகளையே உணவாகக்
கொண்ட கவிஞனனின் பசி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது காயசண்டிகைப் பசி என்று.

தன் நேசத்தையே அதன் நெய்யாக்கி
தூய விளக்கேற்றிய மதிப்பு அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது பிரபஞ்சத்தின் அணையா விளக்கென்று.

உளம் கனிந்து, ஓய்விலாத் தேடுதலை
ஓயாமல் தரும் ஓட்டம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது சலிப்பில்லாத சுகமான தேடலென்று.

விவரம் இல்லாமலே தேடுதலின்றியே
விலாசம் வந்த வழி அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது தேவையான அன்பின் முகவரியென்று.

பாக்கள் எழுதி எழுதிப் படைத்த போதும்
பாடல்களின் ஆழம் அன்று புரியவில்லை.
இன்று அன்பின் வயப்பட்டபின்தான் தெரிந்தது
அது மூழ்காமலே முத்துத் தரும் கடலென்று.


2 comments:

  1. The poems are absorbing and highly emotive. there is a welcome underlying layer of pathos in them.
    Just Awesome.
    H Ramakrishnan

    ReplyDelete
  2. very good.
    this can be very much ppreciated by intellutuals, except vizhi yellam kadhai kettu.

    poeams like that, very simple. but very good, can be sent to magazines and published,

    all the best to her.
    Ramani. chennai 28

    ReplyDelete