அன்பு என்பது வந்து விட்டாலே அனைத்தும் அழகாகவேத் தெரியும். அழகியைப் பயன்படுத்தி மலர்ந்த இந்த அன்புக் கவிதை அன்பு உள்ளங்களுக்கு சமர்ப்பணமாகட்டும்!
அன்புலகின் அழகு வழி!
ஆர்ப்பரிப்பவர்க்கெல்லாம் தெரியுமோ?
ஆழ்மனதை அகழ்ந்தவர்க்கே தெரியும்!
இங்குதான் கிள்ளி வைத்த நினைவுகள்
அள்ள அள்ள வளர்ந்து கொண்டே இருக்கும்.
தள்ள தள்ள தேங்கிக் கொண்டே இருக்கும்!
இங்குதான் சொல்லிச் சென்ற வார்த்தைகள்
வண்ணம் பெற்று வானவில்லாய் வலம் வந்து
வண்ணத்தை பூக்களுக்கு பூசிச் சிரிக்கும்!
இங்குதான் தப்பிச்சென்ற நினைவுகள்
தேக்கம் கண்டு நேசம் படர, படர
ஏக்கப் பூவாகி உதிர்ந்து கொண் டே இருக்கும்!
இங்குதான் வந்து நின்ற வாச வசந்தம்
வளம் பலவற்றை வகை வகையாய்
வாயில் தோரணமாய் அழகாய் க(கா) ட்டி வைக்கும்!
இங்குதான் நேச நினைவுகள் எல்லாம்
இனிய வலையாகி, விரிவு பெற்று
கனிந்த உளமதை கண்ணி(ல்) வைத்துப் பிடிக்கும்.
No comments:
Post a Comment