Monday, February 23, 2009

விழிகள் சொன்ன கதை


விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
விடிய விடிய வெள்ளிநிலவு சிரித்தது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாசலுக்கு அருகிலேயே நின்றது இதயம்.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வண்ணத் தாமரை முகமும் சிந்தியது அழகு.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வானத்தின் மேகமும் செக்கர் நிறம் கொண்டது.
விழிகள் சொன்ன கதையெல்லாம் கேட்டு
வாய் திறந்த மலர்களும் மோகனமாய்ஸ் சிரித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வெள்ளி அருவியும் வேகமாய்க் குதித்தது.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
வான் மகளும் கிழக்கை நோக்கி ஓடினாள்.
விழிகள் சொன்ன கதைஎல்லாம் கேட்டு
விழிகள் சொன்ன பதிலோ - மகிழ்ச்சி!


1 comment:

  1. தற்போது சுரப்பதாய் சொன்ன கவிதை ஊற்றிலிருந்து சிந்தாமல் சிதறாமல்,கவிதை தேனை அள்ளி அள்ளி தர வாழ்த்துகள்

    ReplyDelete